• home
Home » » மறுமலர்ச்சி மன்ற முருகன் கும்பாபிஷேக விழா - 06.07.2014

மறுமலர்ச்சி மன்ற முருகன் கும்பாபிஷேக விழா - 06.07.2014

காலையடி - மறுமலர்ச்சி மன்ற வளாக மடாலயத்தில் எழுந்தருளி ஆருள்பாலிக்கும்  அருள்மிகு கந்தசுவாமியார்; ஆகமவிதிகளுக்கு அமைய புதிதாக அமைக்கப்பெற்ற ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பெற்று எதிர்வரும் யூலை மாதம் 6 ஆம் திகதி (06.07.2014) கும்பாபிசேகம் நிகழ்த்துவதற்கு இறையருள் கூடியுள்ளது என்பதனை அறியத் தருவதில் பெருமகிழ்ச்சி அடைகின்றோம்.

இவ் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பெறும் பரிவார தெய்வங்களையும், ஸ்தூபியில் அமையவுள்ள கலசங்களையும் தங்கள் நேர்த்திகளாக வழங்க விரும்பும் அடியார்களும்; கும்பாபிஷேக விழாவினையும், மண்டலாபிஷேக விழாக்களையும் தமது உபயங்களாக செய்ய விரும்பும் அடியார்களும் மன்ற தலைவருடன் தொடர்பு கொண்டு ஆவன செய்து கொள்ளுங்கள்.

அத்துடன், மன்ற வளாகத்தில் அமைந்துள்ள உள்ளரங்கு, திறந்தவெளி அரங்கு, சிறுவர் விளையாட்டுத்திடலுடன் கூடிய முன்பள்ளி, விளையாட்டு மைதானம் ஆகியவற்றின் திறப்பு விழாவும் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 3 ஆம் திகதி 03.08.2014 அன்று இடம்பெறவுள்ளது என்பதனையும் அறியத்தருகின்றோம்.

இந் நிகழ்வுகள் பற்றிய முழு விபரமும், அழைப்பிதழ்களும் வெகு விரைவில் அனைவருக்கும் கிடைக்க ஒழுங்குகள் செய்யப்பெற்றுள்ளன

நன்றி.

செயலாளர்,
மறுமலர்ச்சி மன்றம் - காலையடி

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்