• home
Home » » காலையடி கிராம வரலாறு

காலையடி கிராம வரலாறு


காலையடி கிராமம் சங்கானை மேற்கு பகுதியில் யாழ் நகரத்தில் இருந்து 15 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. இங்கு ஆதிகாலத்தில் ஒரு மரக்காலை இருந்ததாக பலர் கூறக் கேட்டு இருக்கிறேன். அதனூடாக இந்த பெயரை இந்தக் கிராமம் பெற்று இருக்கலாம். ஆயினும் தெளிவான வரலாறு ஒன்று இல்லை.ஏனெனில் எங்கள் ஊரில் எனக்கு தெரிந்த வகையில் ஒரு அகழ்வு ஆராச்சி தகுதி வாய்ந்தவர்களால் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. இங்கு சைவ மக்கள் வாழ்ந்த அடையாளங்களே நிறைய காணப்படுகின்றது.

ஆயினும் 1820 ஆண்டளவில் அமெரிக்க மிசனரியினரால்ஆசியவில் முதன் முறையாக உருவாக்கப்பட்ட இரண்டு் பாடசாலைகளில் ஒன்றான காலையடி அமெரிக்க மிசன் தமிழ் கலவன் பாடசாலை மூலமாக இந்த ஊர் உலக வரைபடத்தில் இடம் பிடித்தது.இந்தப் பாடசாலை அந்த காலத்திலேயே மேற்குலக நாடுகளில் இருக்கும் பாடசாலைகள் போன்று ஒரு சிறுவர் பராமரிப்பு நிலைய வசதியையும் வைத்தியசாலை வசதியையும் பெற்று இருந்தாக கூறப்படுகிறது. ஆதாரம் தமிழ்னெற் இணையத்தளம்.

1960 களில் பின்னர் இந்தப்பாடசாலை இலங்கை அரச கல்வித்தினைக்கழகத்தால் பொறுபேற்கப்பட்டு ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது.

இங்கு வாழும் மக்களின் பிரதான தொழிலாக விவசாயமே விளங்குகிறது. சிலர் பல ஆலயங்களுக்கு பணிவிடை செய்து அந்த வருவாயில் வாழ்ந்தாகவும் கூறப்படுகிறது. நெசவுத்தொழிற்சாலையோன்றும் திருவாளர் சிவசுப்பிரமணியம் அவர்கரளின் முயற்சியால் 1960 களில் இயங்கியதாக தெரிகிறது.

மேலும் எனக்கு தெரிந்த காலமான 1970களில் பலர் கல்வி கற்று அரச பணியாற்றினர். பல்கலைகழங்களில் கல்வி கற்று பட்டதாரியாக வெளி வந்தனர். இந்த இளைஞர்களை ஊக்கிவித்தவர்களில் ஒருவரான ஆறுமுகம் கந்தசாமி (கந்தையா)உபாத்தியார் தனக்கு சொந்தமான நிலத்தை இவர்களின் உற்சாகத்திற்கு பரிசாக அளித்து மறுமலர்ச்சி மன்றம் என்ற ஒரு புதிய வரலாற்றை , ஒரு விளையாட்டு திடலை, ஒரு பாலர் பாடசாலையை இந்த ஊர் மக்களுக்கு அன்பளிப்பாக கொடுத்தார். அதுவரையில் இந்த ஊர் இளைஞர்கள் பணிப்புலம் சனசமூக நிலையத்தோடு இணைந்து இயங்கி வந்திருந்தார்கள்.

1972 ஆம் ஆண்டு ஆரம்பித்த இந்த மறுமலர்ச்சி மன்றம் இந்த ஊர் இளைஞர்களை பல துறைகளில் ஊக்குவித்தும் கலை நிகழ்ச்சிகளை நடாத்தியும் மெய்வல்லுனர் போட்டிகளை நடாத்தியும் வருகின்றது. 1989 ஆம் ஆண்டளவில் சொந்தமாக ஒரு உள்ளரங்க மேடை உள்ள ஒடு கட்டிடம் ஒன்றையும் ஊர் மக்களின் முயற்சியில் புதிதாக கட்டி கொண்டது.இங்கு ஒரு சிறந்த பாலர் பாடசாலை (காலையடி முருகன் முன்பள்ளி ) இயங்கி வருகிறது. பெரிய விளையாட்டு திடல் இங்கு உள்ளது.

மேலும் 1990களின் ஆரம்பத்தில் செட்டிகுறிச்சியை சேர்ந்த புலவர் திரு. வேல்முருகன் தனக்கு சொந்தமாக இருந்த இடுமன் கோவிலை பொது கோவிலாக அறிவித்து பொது மக்களிடம் கையளித்தார். அது வரை ஒரு சிறிய கோவிலாக இருந்த இந்த ஆலயத்தை பின்னர் பொறுபேற்ற நிர்வாகம் இவ்வூர் மக்களிடம் நிதி திரட்டி ஒரு தேர் ஓடும் ஆலயமாக மாற்றி உள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த கோவிலில்  இராஜ கோபுரம் அமைக்க பெற்றுள்ளது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்